வரும் ஆவனி மாதம் 25ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (11.09.2011 ) அன்று சிறுகுடி தெய்வதிரு.மா.சேதுமாதவன் பிள்ளை - மீனம்பிகா மற்றும் திருப்பத்தூர் தெய்வதிரு .சுப.பொன்னையா பிள்ளை - ரமாதிலகம் இவர்களின் பேரனும் திரு.இரமனாதன் என்ற தயாளன் - முத்துமணி இவர்களின் மூத்த மகன் செல்வன். ராம்பிரபு என்ற மண மகனுக்கும் கட்டுகுடிபட்டி தெய்வதிரு.ஸ். ராஜெந்திரன் பிள்ளை-ரஞ்சிதம் மற்றும் ந.சுகானந்தன்-மீனாள் இவர்களின் பேத்தியும் திரு.ரா.பழனியப்பன் திருமதி.யோகலக்ஷ்மி அவர்களின் மகள் செல்வி.ப.வைஷ்ணவி என்ற மண மகளுக்கும் பெரியோர்களால் நிச்சயக்கபட்டு இவர்களின் திருமண விழா மதுரை கே.கே.நகர் ஸ்ம்ட் மஹால் திருமண மண்டபதில் நடைபெற இருக்கிறது. இவர்களின் திருமண விழா சிறப்பக நடை பெற வாழ்த்தி மணமக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்துகிறோம்.
இன்று 7 வது ஆண்டு திருமண நாள் கொண்டாடும் அன்பு இளமாறன் மற்றும் ராஜி இளமாறன் அவர்கள் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்தி அவர்களின் திருமண வீடியோ தொகுப்புகளின் கட்சிகள் பார்க்க பின் வரும் லிங்கை கிளிக் செயவும்
நேற்று (12.08.11) மாலை சிறுகுடி நமது இனத்தின் பெண்களின் சார்பாக ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மந்தை முத்தாலம்மன் சுவாமிக்கு திரு.விளக்கு பூஜை ஆர்த்தி சாவடியில் சிறப்பாக நடை பெற்றது. இதில் நமது இனத்து பெண்களும் மற்றும் பெரியவர்களும் கலந்துகொண்டார்கள். மாலை 5.30௦ மணிக்கு ஆரம்பித்து இரவு 7.30௦ இக்கு நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளை பார்க்க பின் வரும் லிங்கை கிளிக் செய்யவும் .
அமீரகம் ரமேஷ் ஜெயராஜ் அவர்களின் துபாய் பாய்ஸ் என்ற ஒரு கலக்கல் டான்ஸ் வீடியோ - இதில் ஸ்ரீ ராம் ,வெங்கி,ஜனா மற்றும் பலர் ஆடி உள்ளார்கள். இதை துபாயின் பல்வேறு பகுதிகளில் ரமேஷ் அவர்கள் ஒளி பதிவு செய்து வழங்கி உள்ளார்
கடந்த நவம்பர் 7 இம் தேதி அன்று சிறுகுடி தெய்வத்திரு.மாணிக்கம் பிள்ளை சேது அம்மாள் அவர்களின் பேத்தியும் (மதுரை பழக்கடை) திரு.சுப்ரமணியன் திருமதி ராமா அவர்களின் மகள் செல்வி S.ரேவதியை திருப்பத்தூர் பொன்னையா பிள்ளை ராமதிலகம் அவர்களின் பேரன்னும் திரு.பொ.அழகப்பன் - மங்கை மீனால் அவர்களின் மூத்த மகன் செல்வன் அழ.முத்தழகு என்ற மாப்பிள்ளைக்கு பெரியோர்கள் முன்னிலையில் சிறுகுடி மணமகள் இல்லத்தில் திருமண நிச்சியதார்த்த விழா நடை பெற்றது.
கடந்த ஆவணி மாதம் (12.09.10 ) 27இம் நாள் ஞாயிறு அன்று காலை 7.45Am to 8.45Am மணிக்குள் சிங்கம்புணரி தெய்வத்திரு. ராம.பொன்னையா பிள்ளை வள்ளியம்மை அவர்களின் பேரனும் திரு.பொ.சேகரன்-ரேவதி அவர்களின் இளயைபுதல்வன் செல்வன் .பொன்னையா என்ற தினேஷ் என்ற மணமகன்னுக்கும் திருப்பத்தூர் மா.காசியா பிள்ளை வளர்மதி அவர்களின் மகள் செல்வி K.ஜெயசித்ரா என்ற மணமகளுக்கும் சிவபுரிபட்டியல் உள்ள சிவன் கோவிலில் திருபூட்டு நிகழ்ச்சியும் அதை தொடந்து மற்ற வைபவங்கள் சிங்கம்புணரி மக்கள் மன்றத்தில் நடைபெற்றது.
இந்த திருமண விழா புகைப்படங்கள் பின் வரும் லிங்கை கிளிக் செய்யவும்.
சிறுகுடி தெய்வத்திரு.திரு .ராம.க.ராமசுவாமி பிள்ளை திருமதி .தையநாயகி அம்மாள் அவர்களின் பேரனும் திரு.ராம.ராமநாதன் பிள்ளை திருமதி தேன்மொழி அவர்களின் மூத்த மகன் செல்வன்.R.மதன் மோகன் என்ற மாப்பிள்ளைக்கும் திருப்பத்தூர் தெய்வத்திரு.திரு.காசிவைரவன் பிள்ளை - திருமதி மாணிக்கவல்லி அம்மாள் அவர்களின் பேத்தியும் திரு.கா.செல்வசுந்தரம் பாக்கியலட்சுமி அவர்களின் மகள் செல்வி S.தீபா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22.08.2010 அன்று சிங்கம்புணரி மக்கள் மன்றத்தில் திருமதி . தனலட்சுமி மாதவன் அவர்கள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. மறுநாள் சிறுகுடியில் மணமகன் இல்லத்தில் வீடு அறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று 15.08.10 ௦ தங்களின் மேலான ஆதரவுடன் நமது இனைய தளம் 4 வது ஆண்டு முடிந்து 5வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை மிக மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் . இந்த நான்கு ஆண்டுகளில் நங்கள் பல பேரிடம் பாராட்டுகளையும் சிலரிடம் அர்ச்சனைகளையும் பெற்றுள்ளோம் என்றாலும் இரண்டையும் ஒன்றாக கருதி தான் கருத்துக்களை வெளியிட்டோம் .
கடந்த ஒரு ஆண்டக நமது இணையத்தில் சரியாக பதிவுகள் வருவது இல்லை என்ற கருத்து பரவலாக உண்டு. நான் தற்சமயம் வெளிநாட்டில் வசிப்பதால் தகவல்கள் சரியாக நமக்கு கிடைப்பது இல்லை. ஆகவே எங்களால் முடிந்த வரை வரும் காலங்களில்எங்கள் கவனத்துக்கு வரும் செய்திகள் வெளிடுவோம் . தங்களும் தங்களின் குடும்ப விழா மற்றும் ஊர் திருவிழா ஆகிய செய்திகள் மற்றும் புகை படங்களை எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.
இன்று (13.08.10 ) ஆடி கடைசி வெள்ளி - சிறுகுடி அருள்மிகு ஸ்ரீ மந்தை முத்தல்லம்மன் சுவாமிக்கு திரு விளக்கு பூஜை நடை பெற இருக்கிறது. இன்று மாலை சிறுகுடி கிழக்கு தெரு ஆர்த்தி சாவடியில் 6.00 மணி அளவில் இந்த நிகழ்சிகள் நடைபெறுகிறது.
27.05.10 & 28.05.10
புரவி எடுப்பு திருவிழா
வரும் மே மாதம் (27.05.10 & 28.05.10 ) வியாழன் மற்றும் வெள்ளிகிழமை சூரக்குடி அருள்மிகு செகுட்டைய்யனார் சுவாமிகள் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற இருக்கிறது.
கட்டுகுடிபட்டி ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் பூ செறிதல் திருவிழா
கட்டுகுடிபட்டி ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் கோவில் பூ செறிதல் திருவிழா வரும் மே மாதம் 2இம் நாள் ஞாயிறு அன்று மற்றும் மே 3இம் ( 02.05.10 & 03.05.10 ) நாள் அன்று நடை பெற இருக்கிறது. முதல் நாள் காலை அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடை பெரும். பின் மாலை சரியாக 6.00 மணியளவில் இருந்து இரவு 8.00 மணிவரை விளக்கு பூஜை நடைபெறும். கேரளாஜென்டமேளம் & 2 யானைஊர்வலம் பின் இரவு 10.00 மணியளவில் ஸ்ரீ துர்க்கா ஏஜ்ஜன்சீஸ் சார்பில் திரு. சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் நடத்தும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. திரு.மகேந்திரன்அவர்கள்வழங்கும்கும்மிபட்டுநிகழ்ச்சியும்திரு.நா.சுகனந்தம்பிள்ளைஅவர்கள்வழங்கும்குதிரைஆட்டம் அதை தொடர்ந்து கரகாட்டம் நடைபெறுகிறது. பின் இரவு 12.30 மணி அளவில் வெள்ளை அம்மாள் கோவிலில் இருந்து ஊர் பெண்கள் சார்பாக ஆர்த்தி ஊர்வலம் தொடக்கி கோவில் சென்று சுவாமிக்கு ஆர்த்தி பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து அதிகாலை 4.00 மணி அளவில் அம்மனுக்கு பூ செறிதல் மற்றும் பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. பின் அம்மனுக்கு அபிசேகம் ஆராதனை நடைபெறும் . பின் மறுநாள் காலை அம்மனுக்கு கிடாய் வெட்டு கோழி பலி கொடுத்து பொங்கல் வைக்கும் வைபவம் நடை பெரும். மாலை 5.00 மணி அளவில் வாப்படி திருவிழா நடை பெறுகிறது. இத்துடன் இனிதே திருவிழா நிறைவு பெறுகிறது. இரவு கட்டுகுடி பட்டி திரு. செ.பத்மநாபன் பிள்ளை மற்றும் திரு. ஜெயமூர்த்தி ஜெயபிரகாசம் பிள்ளை அவர்கள் இணைந்து நடத்தும் அங்கு இங்கு இன்னிசை கச்சேரி நடை நடை பெறுகிறது. திருவிழா புகை படங்கள் விரைவில் வெளி வரும்.
நான் எனது வீடுக்கு போன் பேசிய பொழுது வரும் பங்குனி மாதம் 2 இம் நாள் முதல் செவ்வாய் ( 16.03.2010) அன்று சிறுகுடி மந்தை முத்தாலம்மனுக்கு காப்பு கட்டி மறு வாரம் பங்குனி 9 மற்றும் 10 ( 23.03.2010 & 24.03.10) செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அருள்மிகு ஸ்ரீ மந்தை முத்தால்லம்மன் கோவில் திருவிழா நடை பெற இருப்பதாக கூறினார்கள்.
சிறுகுடி என்பது நான் பிறந்த கிராமம். அங்கிருந்து கல்வி அதை தொடர்ந்து வேலை காரணமாக மதுரைக்கு சென்று நான் சுமார் 28 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று நான் மதுரை வாசி சமீபம் துபாய் வாசி . இருபத்தோராம் நூற்றாண்டில் அடியெடுத்துவைத்து அசுரவேகப் பாய்ச்சல் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு இன்டர்நேஷனல் சிட்டியின் இயக்கத்தில் காற்றோடு பறந்து கொண்டிருக்கும் ஒரு துகள். - Click Here
01-10-2009
01-10-2009 வியழைக்கிழமை காலை 10.00 மணி அளவில் சூரக்குடி திரு. ந.சண்முகம் பிள்ளை திருமதி ராம திலகம் அவர்களின் மகன் திரு. பழனிவேல் என்ற ராஜா திருமதி.லலிதா தம்பதியர்களின் மகள் ப.பிரியங்கா என்ற சிறுமி பெரிய பெண் ( பூப் பெய்து ) ஆகிவிட்டதால் அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா ( சிறிய சடங்கு ) சூரைக்குடி அவர்களின் வீட்டில் நடைபெற்றது .
ஆடி கடைசி வெள்ளி அன்று மாலை 6.30 (14-08-2009) மணி அளவில் சிறுகுடி ஆரத்தி சவடியில் திரு விளக்கு பூஜை வழிபடு நிகழ்ச்சி நடை பெற இருக்கிறது. இதில் நம் இனத்து பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற வேண்டுகிறோம் . இந்த நிகழ்ச்சியை சிறுகுடி வெள்ளாளர் இளைஞர் சங்கம் ஒருங்கிணைத்து நடத்துகிறது.
நிகழும் மங்களகரமான விரோதி வருடம் ஆணி மாதம் 10 இம் நாள் ( 24/06/2009 ) புதன்கிழைமை சுபயோகா சுபதினத்தில் காலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள் கட்டுகுடிபட்டி தெய்வத்திரு .வெ.நடராஜா பிள்ளை திருமதி கல்யாணி அம்மாள் அவர்களின் பேரனும் திரு.ந.ஜெயராஜ் பிள்ளை-சாந்தி அவர்களின் மகன் திருவளர்செல்வன் செல்வன் . J.ரமேஷ் B.E., என்ற மாப்பிளைக்கும் திண்டுக்கல் தெய்வத்திரு.N.பழனிநாதன் பிள்ளை - சந்திரவதனா அம்மாள் அவர்களின் பேத்தி திருமதி.P.ராஜபாண்டியன்-முத்துலெட்சுமி அவர்களின் புதல்வி திருநிறைசெல்வி R.உமா மகேஸ்வரி (B.Tech.,) என்ற மணமகளுக்கும் திண்டுக்கல் தாடிகொம்பு ரோடு P.V.K மகாலில் திருமணம் நடைபெற இருக்கிறது . மணமகன் ரமேஷ் துபாயில் பணிபுரிகிறார். மணமகள் செல்வி உமா மகேஸ்வரி B.Tech இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறார் . மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் .
தங்கள் நல் வரவை விரும்பும் மணமக்கள் குடும்பத்தார். மணமகன் குடும்பத்தார். ந.ராஜேந்திரன் பிள்ளை-கமலவேணி அம்மாள் , ந.சுகானந்தன் பிள்ளை-மீனாக்ஷி அம்மாள் , ந.ஷண்முகம் பிள்ளை - சத்தியவதி அம்மாள் ந.ராமநாதன் பிள்ளை- சுந்தரேஸ்வரி , ந.நாகராஜன் பிள்ளை - ஜமுனாராணி, ந.ஜெயராஜ் பிள்ளை-சாந்தி, செல்வி.ஜெ.துர்கா ந.ஷண்முகம் பிள்ளை-ராமதிலகம்,A.திரவியம்-ரஞ்சனி அம்மாள்.
சிறுகுடி திரு.குழ.பழனிநாதன் பிள்ளை - லலிதா அம்மாள் அவர்களின் மகன் வழி பேத்தியும் சிறுகுடி லெ.சண்முகநாதன் பிள்ளை - மீனாக்ஷி அம்மாள் அவர்களின் மகள் வழி பேத்தியும் திரு. பழ.மருது பாண்டியன் - சங்கீதா ஆகிய இவர்களின் மகள் செல்வி. ஞானாம்பிகை என்ற ஜனனி மருதுபாண்டியன் கடந்த 06/05/2009 புதன் கிழமை அன்று பூஷ்பவதி ஆகிவிட்டாள் என்றும் மேலும் வரும் வைகாசி மாதம் 12 நாள் புதன்கிழமை ( 27/05/2009)காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிறுகுடி அவர்கள் இல்லத்தில் பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடைபெற இருகிறது என்பதை தெரிவித்துகொள்கிறோம் . இந்த விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
20/05/2009
ஸ்ரீ முப்புளிகருப்பர் சுவாமி கோவில் குடமுழுக்கு விழா
கே.புதுபட்டிஇல் கட்டுகுடி பட்டி முப்புல்லிகருப்பர் சுவாமிகள் கோவில் பங்காளிகள் தங்களின் குலதெய்வ கோவிலை புதிப்பித்து ராஜகோபுரம் கட்டி குடமுழுக்கு விழா வருகிற 20-05-2009 அன்று புதன்கிழமை காலை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கடடுகுடிப்படியை சார்ந்த அந்த கோவில் பங்காளிகள் மற்றும் பிறந்த மக்கள் மற்றும் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொள்ள இருகிறர்கள் . முதல் நாள் இரவு யாக சாலை பூஜை நடைபெறும். மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
மதுரை சித்திரை திருவிழா கடந்த 09-05-2009 மற்றும் 10-05-2009 அன்று மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை அண்ணா நகர் பாண்டியன் குடிருப்புஇல் நமது உறவினர்கள் கலந்து கொண்ட திருவிழா போடோஸ் - இதில் உள்ளது . இந்த விழாவில் முதல் நாள் 09-05-2009 இரவு ஸ்ரீ கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் சுமார் 11.00 மணியளவில் நமது மண்டப வந்து சென்றார். மறுநாள் மாலை 7.00 மணியளவில் கருட வாகனத்தில் வந்து சென்றார் .
வரும் ஏப்ரல் மாதம் 29 இம் நாள் புதன் கிழமை காலை 9.00 மணியில் இருந்து 10.30 மணிக்குள் சிங்கம்புணரி மேகநாதன் ஞானம்பாள் இல்லத்தில் சிறுகுடி தெய்வத்திரு ராம.க.ராமசுவாமி பிள்ளை தையல் நாயகி அவர்களின் பேரனும் ராம.சொக்கலிங்கம் பிள்ளை திருசெல்வி அவர்களின் இளைய புதல்வன் திருநிறை செல்வன் சொ.செந்தில்குமார் B.E., ( Senior Software Engineer, M/s.Schneider Electric India P Ltd., Bangalore) என்ற மணமகனுக்கும் திருப்பத்தூர் தெய்வத்திரு ராம.ஷண்முகம் பிள்ளை கனகவல்லி அவர்களின் பேத்தியும் ச.ஞானசேகரன் பிள்ளை - உமையாள் அவர்களின் புதல்வியும் ஆகிய திருநிறைசெல்வி.ஞா.கனகபல்லவி B.Sc., M.C.A ஆகிய இவர்கள் இருவர்க்கும் திருமணவிழா சிறுகுடி திரு.ராம.கரு.சிவா.கருப்பையா பிள்ளை திருமதி.கண்ணாமணி அம்மாள் அவர்களின் தலைமையிலும் கட்டுகுடிபட்டி திரு.சி.மேகநாதன் பிள்ளை திருமதி ஞானம்பாள் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது. மணமகன் தற்போது பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். மணமகள் குடும்பத்தார் சிங்கம்புனாரியில் வாழ்ந்து வருகிறார்கள் .
30/04/2009
பூ.ராஜாராம் - சுப.சொர்ணா திருமணவிழா
வரும் 30-04-2009 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் கட்டுகுடிபட்டி திரு.கே.பூபதி - சிற்றரசி அவர்களது மகன் செல்வன் பூ.ராஜாராம் என்ற மாப்பிளைக்கும் SR பட்டணம் ப.சுப்பிரமணியன் - மலர்விழி அவர்களது மகள் திருநிறை செல்வி.சுப.சொர்ணா B.Tech., என்ற மணமகளுக்கும் சிங்கம்புனாரி பிளாசம் கல்யாண மண்டபத்தில் இவர்கள் திருமண விழா நடைபெற இருக்கிறது. மணமகன் சிங்கபூரில் பணிபுரிகிறார் . மணமகள் சென்னையில் பணிபுரிகிறார். மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் .
30/04/2009
புதுமனை புகுவிழா
வரும் 30/04/2009 அன்று வியாழக்கிழமை காலை 10.30 to 12.00 மணிக்குள் சிறுகுடி கிழக்கு தெருவில் திரு. சிவா.முத்துவடிவு - பூங்கொடி மற்றும் இவர் தம்பி திரு.சிவா.கணேசன் - நித்தியகலா ஆகிய இவர்கள் புதிதாக கட்டிய இல்லத்தில் புதுமனை புகு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் .
23-03-2009 அன்று காலை அம்மனுக்கு கோவலில் காப்பு கட்டி திருவிழா தொடகியாது . பின் இரவு 10.00 மணியளவில் அம்மன் நமது தெருவில் உள்ள ஆரத்தி சவுக்கை கொண்டுவரப்பட்டு அதன் தொடர்ச்சியாக நகை பெட்டி மற்றும் பரிவார்கள் கொண்டுவரப்பட்டது . பின் இரவு சுமார் 1.00 மணிக்கு மேல் திரை எடுத்து அம்மன் கண் திறத்து . பின் இரவு சுமார் 1.30 மணியளவில் பிள்ளைமார் இனத்து பெண்களால் அம்மனுக்கு முதல்ஆரத்தி ஊர் வலம் புறப்பட்டது . அம்மனுக்கு ஆரத்தி இந்த ஆண்டு சுமார் 172 பேர் எடுத்தார்கள் . பின் தீப ஆராதனைகள் முடித்து சுமார் 2.30 மணியளவில் சுவாமி பூ பலக்கில் அமர்த்தினார்கள் . அதை தொடர்ந்து முதல் வான வேடிக்கையாக பிள்ளைமார் வான வெடி போடா பட்டது. பின் 25.03-2009 அதி காலை சுமார் 4.00 மணியளவில் அம்மன் கோவில் சென்றது. அதன் பின் செட்டியார் சமூகம் மற்றும் ஊரார் ஆரத்தி மற்றும் மாவிளக்கு முடிந்து காலை 5.30 மணியளவில் பிள்ளைமார் சமூக மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. பின் பொது மக்களுக்கு தரிசனம் மாலை 4.00 மணிவரை நடைபெற்றது.பின் ஆடு பலி கொடுத்து மாலை 7.00 மணிக்கு மேல் புறப்பட்டது . இத்துடன் இனிதே திருவிழா நிறைவு பெற்றதுஇந்த ஆண்டு சிறுகுடி திருவிழாவில் என் வாழ்வில் இது போன்ற மக்கள் கூட்டம் பார்த்து இல்லை. அந்த அளவிற்கு கூட்டம்.
சிறுகுடி ஸ்ரீ மந்தை முத்தாலம்மன் கோவில் காப்பு கட்டும் விழா
இன்று ( 17/03/2009 ) இரவு சரியாக 8.00 மணியில் இருந்து 9.00 மணிக்குள் சிறுகுடி ஸ்ரீ மந்தை முத்தாலம்மன் சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது . வரும் பங்குனி 11 ( செவ்வாய்) மற்றும் 12 (புதன்) தேதிகளில் ( 24-03-2009 & 25-03-2009) திருவிழா நடைபெற இருக்கிறது.
சிறுகுடி ஸ்ரீ மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா
முதல் நாள் ( 24-03-2009) அன்று இரவு 6.00 மணிக்கு மேல் சிறுகுடி அருகில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து இந்த ஆண்டு அம்மன் செய்யப்பட்டு நமது ஊருக்கு கொண்டுவரப்படும் . பின் நமது தெருவில் அமைந்து உள்ள சாவடிக்கு அம்மன் வருவர். அம்மனுக்கு நகை பூட்டி அபிசேகம் ஆர்த்தி எடுத்து பூ பல்லாக்கில் அம்மன் கோவில் செல்லும் . பின் அங்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடுகள் நடைபெறும் . மேற்கண்ட அணைத்து நிகழ்ச்சிகளும் இரவு 09.00 மணியில் இருந்து அதி காலை 5.00 மணிவரை நடைபெறும். இதன் பின் தான் அனைவரும் தூங்க செல்வர்கள் . இரவு கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெறும். மறு நாள் காலை முத்தாலம்மன் கோவில் சென்று அனைவரும் வழிபாடுகள் செய்வார்கள் . மாலை 4.00 மணிக்கு மேல் கிடா வெட்டு நடைபெறும் . அதன் பின் சுவாமி பூஞ்சோலைக்கு கொண்டு செல்லப்படும் . இத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெரும் . இந்த திருவிழாவில் அனைவரும் அதிகம் பார்த்து ரசிப்பது நமது சமூகத்து பெண்கள் மட்டும் பங்கு பெரும் ஆரத்தி மற்றும் சுவாமி பூஞ்சோலை செல்லும் பொது ஊராணியை சுற்றி நின்று அம்மனை வழி அனுப்பிவைப்பது தான் . அன்னை வரும் வருக அம்மன் அருள் பெருக என்று உங்களை அன்புடன் அழைக்கிறோம் .
23/02/2009மகா மகா சிவராத்திரிநேற்று (23-02-2009) மகா மகா சிவராத்திரி முன்னிட்டு நமது இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர் அவர் குலதெய்வம் வழிபாடு மிக சிறப்பாக நடைபெற்றது. கே.புதுபட்டி, செம்புகம் பேட்டை, அய்யா பட்டி, நெய்வாசல், தென்கரை, பெரிய்ச்சிகோவில் இளைதான்குடி, சிலந்தகுடி, ஓலைகுடி, காரைக்குடி, சிறுகுடி, சிங்கம்புனாரி மற்றும் சில இடங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ( மேற்படி இடங்களில் போட்டோ யாராவது எடுத்து இருத்தல் எமக்கு இ மெயில் மூலம் அனுப்பி வைக்கவும். Email ID sivasank_230674@yahoo.com )
22/02/2009 சிறுகுடி வெள்ளாளர் இளைஞர் சங்கம்
22/02/2009 ஞாயிறு அன்று இரவு சிறுகுடி வெள்ளாளர் இளைஞர் சங்கம் கூடியது . இதில் வரும் மார்ச் 24.தேதி மற்றும் 25.தேதி நடைபெற இருக்கும் சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் பற்றி கலந்தாய்வு செய்யப்பட்டது. இறுதியாக சேலம் மானடா மயிலாட எனும் ஆடலும் பாடலும் நாட்டிய நிகழ்ச்சியை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. திருவிழா முடிந்த மறுநாள் மார்ச் 26.தேதி சங்கம் கூடி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
வரும் 15-02-2009 மாசி மாதம் 3 இம் நாள் ஞாயிறு அன்று காலை 07.35.இல் இருந்து 09.00 மணிக்குள் சிலந்தகுடி ( புதுக்கோட்டை ) திரு. S. மாணிக்கம் பிள்ளை திருமதி. வனஜா அம்மாள் அவர்களின் புதல்வன் செல்வன் .M.சிவராமன் (எ) பாஸ்கரன் என்ற மாப்பிள்ளைக்கும் பேராவுரணி திரு.S.பரமசிவம் பிள்ளை திருமதி மாரிமுதம்மால் அவர்களின் புதல்வி திருநிறை செல்வி . P. செந்தமிழ் செல்வி ஆகிய இவருக்கும் புதுக்கோட்டை திலகர் திடல் அருகில் உள்ள பொன் சரவண மஹாலில் திருமணம் நடைபெற இருக்கிறது. மணமகன் சிங்கபூரில் பணிபுரிகிறார். மணமகனுக்கு இரு சகோதரிகள் . மணமக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் .
கட்டுகுடிபட்டி திருமதி .சந்திரா சுப்பரமணி பிள்ளை அவர்களின் மகள் திருமதி. ரமிலா மற்றும் திண்டுக்கல் திரு.பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்களின் மகன் திரு.லோகநாதன் அவர்களுக்கும் கடத்த 25.12.2008 நாள் அன்று மதுரைல் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கடந்த 25-01-2009 அன்று மதுரைல் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது . அந்த குழந்தைக்கு நிரஞ்சன் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த தம்பதியருக்கு இது இரண்டாவது குழந்தை. முதல் குழந்தை பெண் . பெயர் ஜோசிகா .
R.கார்த்திகேயன் - ஷோபனா திருமண விழா வரும் பிப்ரவரி மாதம் 2 இம் நாள் திங்கட்கிழமை காலை 6.30 TO 7.30 மணிக்குள் மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருகோவிலில் கட்டுகுடிபட்டி திரு.ந.ராமநாதன் பிள்ளை திருமதி.சுந்தரம் அவர்களின் மகன்