VELLALAR ILAIGNAR SANGAM ------ SIRUGUDI
![]() ![]() ![]() ![]() |
29-03-2009 ஞாயிறு
சிறுகுடி பிள்ளைமார் நல சங்கத்தின் - 2008-2009 ஆண்டின் வரவு செலவு அறிக்கை - சிறப்பு கூட்டம்
கடந்த 29.03.2009 ஞாயிறு அன்று இரவு 8.30 மணிக்கு மேல் சிறுகுடி நடு தெருவில் அமைத்துள்ள அம்மன் ஆரத்திசவுகைஇல் சிறுகுடி பிள்ளைமார் நல சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது . இதில் சங்கத்தின்துணை தலைவர் திரு.பாஸ்கரன் அவர்களும் செயலாளர் திரு.அழகேசன் அவர்களும் கூட்டத்துக்கு வந்து இருந்தஅனைவரயும் வரவேற்று கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் பற்றி அறிவித்தார் . முதலாவதாக சங்கத்தின் 2008-2009 இம்ஆண்டின் சிறுகுடி வெள்ளாளர் இளைஞர் சங்கத்தின் வரவு செலவு அறிக்கையை சங்கத்தின் பொருளாளர்திரு.சிவா.ராமதாஸ் அவர்கள் சமர்பித்தார் . பின் அதன் ஆண்டு அறிக்கை பிரதியை அனைவருக்கும் வழங்கிவிட்டு அதை பற்றிய விவாதம் நடைபெற்றது. சங்கத்தின் வரவு செலவு அறிக்கை பின்வருமாறு உள்ளது பார்க்கவும்.
| சிறுகுடி வெள்ளாளர் இளைஞர் சங்கம் மூன்றாண்டு வரவு செலவு அறிக்கை ( 1-4-2006 TO 31-03-2009) | |||
| INCOME | 31/03/2007 | 31/03/2008 | 31/03/2009 |
| சுவாமிகள் வரவு | 2.50 | 2.00 | 2.50 |
| CASH IN HAND - OPENING BALANCE | 283374.15 | 334845.00 | 399548.75 |
| ஆதாய ஆண்டு மொத்த வட்டி வரவு | 46471.25 | 54583.25 | 59666.25 |
| சந்தா மற்றும் நன்கொடை | 38068.00 | 42718.00 | 56779.00 |
| ஆரத்தி நுழைவு சீட்டு வரவு | 8400.00 | 8000.00 | 8550.00 |
| வெளிநாடு நன்கொடை-சிங்கப்பூர் சுப.ராமன் மூலம் | 0.00 | 13000.00 | 0.00 |
| வெளிநாடு நன்கொடை - துபாய் | 0.00 | 1600.00 | 0.00 |
| மொத்த வரவு | 376315.90 | 454748.25 | 524546.50 |
| EXPENSES | |||
| திருவிழா ஆடல் பாடல் மற்றும் இதர செலவுகள் | 37630.00 | 50275.00 | 55050.00 |
| சங்கத்தின் பராமரிப்பு ஆண்டு செலவுகள் | 3838.50 | 4924.50 | 5546.50 |
| அமரர் ஊர்தி இடம் பராமரிப்பு செலவுகள் | 0.00 | 0.00 | 42800.00 |
| மொத்த செலவுகள் | 41468.50 | 55199.50 | 103396.50 |
| ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு | 334847.40 | 399548.75 | 421150.00 |
நமது பிள்ளைமார் சமூகத்து பெண்கள் எடுத்து வரும் ஆர்த்தி குட விளக்கு அணிவகுப்பு மற்றும் பிள்ளைமார் ஆர்த்தி சவுக்கைஇல் அம்மன்னுக்கு நடைபெறும் முதல் தீபாராதனை பற்றிய நிகழ்ச்சிகளை தினமலர் நாளிதழில் திருவிழா சிறப்பு ஆன்மிக பதிப்பில் திட்டம் இட்டு இருட்டடிப்பு செய்து வெளிவராமல் இருக்க உடந்தையாக இருந்த அலங்காரம் செட்டியார் என்ற நபரை வன்மையாக கண்டித்து சிறுகுடி முழுவது சுவர் ஒட்டி அடித்து நமது எதிர்ப்பை காட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அவர் தனது சொந்த செலவில் மறு பதிப்பு அடித்து வெளியட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
- பின் நமது சங்கத்தின் சார்பில் செயப்பட்டுள்ள அமரர் ஊர்தியை திரு.ப.பாண்டி அவர்கள் பராமரித்து வருவதுஎன்றும் அதற்கு கட்டணம் ரூபாய் 250.00 வசூலிப்பது என்று முடிவு செயப்பட்டது.
- பொங்கல் விழா நடத்த சங்கம் பணம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செயப்பட்டது.
- பின்னர் சங்கத்தின் கை இருப்பு ரொக்கம் ரூபாய் 4,20,000/- ( Rupee Four lakh twenty thousand only) 84 பேருக்கு ரூபாய் 5000.00 வீதம் 1.5% வட்டிக்கு நமது உறுப்பினர்களுக்கு வழங்குவது என்று முடிவுஎடுக்கபட்டது.
- இத்துடன் கூட்டம் கலைந்தது.
சிறுகுடி வெள்ளாளர் இளைஞர் சங்கத்தின் பொது குழு
26-03-2009 அன்று காலை 11.00 மணி அளவில் நமது சிறுகுடி வெள்ளாளர் இளைஞர் சங்கத்தின் பொது குழு கூடியது. இதில் நேமநகர் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் திரு. ராம.சிவஞானம் பிள்ளை மற்றும் அச்சங்கத்தின் செயலாளர் திரு.சிவா.முத்துவடிவு பிள்ளை அவர்கள் முன்னிலை வகித்து கூடத்தினை தொடங்கி வைத்தார்கள் . முதலில் வெள்ளாளர் இளைஞர் சங்கத்தின் பெயர் இன்று முதல் சிறுகுடி பிள்ளைமார் நல சங்கம் என்று பெயர் மாற்றபட்டது. இந்த கூடத்தில் சிறுகுடி திருவிழாவில் பிள்ளைமார் சமூகத்தின் ஆரத்தி சவடியில் அம்மனுக்கு முதல் ஆரத்தியாக நமது சமூகத்தின் சார்பில் நடை பெரும் நிகழ்ச்சியை இருட்டடிப்பு செய்து செட்டியார் சமூகத்திக்கு ஆதரவாக செய்தி வெளியட்ட தினமலர் பத்திரிக்கையும் அதற்கு துணை நின்ற செட்டியார் சமூகத்தினரை பொதுக்குழு வன்மையாக கண்டித்தது . இந்த நிகழ்ச்சிக்கு பரிகாரம் கோரி வருத்தம் தெரிவித்து மறு பிரதி வெளியட கோரப்பட்டது .பின்னர் கடந்த மூன்றாண்டுகள் பதவி வகித்த நிர்வாகிகளின் பதவி காலம் முடித்தால் சங்கதிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடை பெற்றது. இதன் படி பின் வரும் நிர்வாகிகள் வரும் மூன்றாண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார்கள் .
| தலைவர் | திரு . சுப.மு.ராம.தியாகராஜன் பிள்ளை |
| துணை தலைவராக | திரு.ஞ.பாஸ்கரன் |
| செயலாளர் | திரு.கதி.அழகேசன் |
| இணை செயலாளராக | திரு.தி.மனோகரன் |
| பொருளாளராக | திரு.சிவா.ராமதாஸ் |
அவர்களும் ஏக மனதாக தேர்வு செயப்பட்டது . பின்னர் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிமுகம் செயப்பட்டு பதவி ஏற்றுகொண்டனர் . பின் சங்கத்தின் நிர்வாக வசதிக்காக 15. பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செயப்பட்டது . இதில் முதல் முறையாக நமது இன மகளிருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டது .இதன் உறுப்பினர்கள் பின் வருமாறு .
செயற்குழு உறுப்பினர்கள்
| திருமதி.சந்தனலக்ஷ்மி சிவஞானம் | திரு.PL.பாண்டி , |
| திருமதி.P.லலிதா பழனிநாதன் | திரு.L.செல்வராஜ் |
| திருமதி.N.நிர்மலா நாகராஜன் | R.மணிவண்ணன் |
| திருமதி.தேன்மொழி ராமநாதன் | S.செந்தில்நாதன் |
| திருமதி.ஷர்மிளா செல்வம் | ஞ.மீனாக்ஷி சுந்தரம் |
| திருமதி.கவிதா ரமேஷ் | திரு.அழகப்பன் |
| ராமநாதன் , | |
| சுப.லக்ஷ்மணன் |
தகவல் மற்றும் செய்தி பிரிவு - சிவா.சிவசங்கரன்
பின் நமது சங்கத்தின் புதிய தலைவர் அனைவர்க்கும் நன்றி தெரிவித்து நமக்கு எப்படி காரணம் ( காரணம் என்பது சிறுகுடி கிராமத்தில் நமது பிள்ளைமார் ஜாதிக்கு உள்ள ஊர் மரியாதை) கிடைத்தது என்பது பற்றி 1934 இம் ஆண்டு சமுத்திரப்பட்டிஇல் சுமார் 500 பேர் கலந்து கொண்ட மிக பெரிய பஞ்சத்து மற்றும் தேர்தல் மூலமாக நமக்கு சாதகமாக கிடைத்த வெற்றி மற்றும் அதற்கு சாட்சியாக உள்ள ஆவணங்களை அனைவர் பார்வைக்கும் வைத்து அதை படித்து காண்பித்தார் . பின்னர் சங்கத்தின் ஆக்கபூர்வ நடவடிக்கை பற்றி அனைவரது கருத்துக்களும் பகிர்த்து கொண்டார்கள் . இந்த நேரத்தில் திருமதி.லக்ஷ்மி ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஜெ.சிவசங்கரன் ஆகிய இருவரும் அவர்களுக்கு மன வருத்தம் அடையும் படி பொய்யான அவதுறு பேசும் சாவித்திரி தங்கசாமி மீது புகார் செய்தார்கள். பின்னர் இந்த பிரச்னை சம்மந்தமாக திரு. சிவஞானம் பிள்ளை அவர்கள் பார்த்து விசாரித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. பின்னர் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை வரும் 29.03.2009 அன்று இரவு 8.00 மணி அளவில் நடைபெறும் கூடத்தில் சமர்பிக்கப்படும் என்று கூறி கூடம் முடித்து.


